அந்தக் காலத்தில் வங்கி கிடையாது. இவனிடமோ ஏராளமாகப் பொற்காசுகள். செல்வம் 'பெற்றான் பொருள் வைப்புழி' என்று வள்ளுவர் சொல்லியிருக்கும் வங்கியாகிய பசியால் துடிக்கும் வறியவரின் வயிறுபற்றிக் கேள்விப்பட்டிருந்தாலும் அதில் நம்பிக்கையில்லை. வயதாகிவிட்டது. ஒரு துணியில் தங்கக் காசுகளை முடிந்து, தன்வீட்டு மண்சுவரில் ஒரு ஓட்டை செய்து, அதில் உள்ளேவைத்துப் பூசிவிட்டான். அவனுக்கு உங்களைப் போல ஒரு நல்ல நண்பன் இருந்தான். அவன் மட்டும் விடாமல் "தர்மம் செய், அதுதான் கடைசி வரையில் உன்னைப் பாதுகாக்கும், உன்னோடு கூடவரும்" என்று சொல்லியபடியே இருப்பான்.
அந்திமக் காலம் வந்தது. நோயிலும் பாயிலும் விழுந்தான் கிழவன். மரணத் தறுவாய். எங்கெங்கோ இருந்த மக்கள் எல்லோரும் வந்து தந்தையின் படுக்கை அருகே நிற்கிறார்கள். அவனது ஆசையை நிறைவேற்றவேண்டுமே. அப்பனுக்கு என்ன வேண்டும் என்று கேட்டு உபசரிக்கிறார்கள், நச்சரிக்கிறார்கள்.
திடீரென்று கிழவனுக்கு நண்பன் அறம் செய்யச் சொன்னது நினைவுக்கு வந்தது. சாகும்போதாவது தர்மம் செய்யலாமே என்ற எண்ணமும் வந்தது. "சுவருக்குள்ளே பொற்காசு முடிப்பு இருக்கிறது" என்று சொல்லவேண்டும். வாய் அடைத்துவிட்டது. அருகில் நின்ற மகனிடம் கையைப் பொற்கிழி போலக் காண்பித்து, சுவரையும் காண்பித்தான்.
"ஐயோ, அப்பா எதையோ கேட்கிறார். புரிந்துகொண்டு கொடுக்கமுடியாத பாவியாகிவிட்டேனே" என்று நினைத்து ஒரு மகன் கதறினான். இவர் மீண்டும் அதே சைகை காட்டினார்.
"ஆஹா, எனக்குத் தெரிந்துவிட்டது!" ஒரு மகன் கூக்குரலிட்டான். "அவருக்குப் புளிப்பான விளாங்காய் ரொம்பப் பிடிக்கும். அது வேண்டும் என்று கேட்கிறார்" என்றான் ஒருவன்.
"மூன்றாவது வீட்டில் விளாமரம் இருக்கிறது. நான் போய் நிலைமையைச் சொல்லி எப்படியாவது ஒரு காய் வாங்கிக்கொண்டு வருகிறேன்" என்று சொல்லிவிட்டு இன்னொரு மகன் ஓடினான்.
அவன் வருவதற்குள் கிழவனின் உயிர் பிரிந்தது. சுவற்றில் புதைத்த பொன் குடும்பத்தினருக்கோ, ஏழைகளுக்கோ பயன்படாமல் போயிற்று. ஊர்க்காரன் ஒருவன் சொன்னானாம் "இத்தனைத் துட்டு வச்சிக்கிட்டு என்ன பிரயோசனம்? நாலுபேருக்குச் சோறு போட்டிருந்தா வயிறு குளுந்து வாழ்த்துவாங்க. இப்ப ஒண்ணுமில்லாமப் போயிட்டாம் பாரு. இவன்லாம் பொறந்து என்ன புண்ணியம்?"
இதையும் வள்ளுவன் சொல்கிறான்:
ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்
தோற்றம் நிலக்குப் பொறை
(நன்றியில் செல்வம்: 1003)
[சம்பாதிப்பது ஒன்றே குறியாக வாழ்ந்து, (அந்தப் பொருளை ஏழைகளுக்குக் கொடுப்பதனால் வரும்) புகழை விரும்பாத மனிதர் பிறந்ததே உலகத்துக்குப் பாரம்.]
நன்றி: என் சரித்திரம், எழுதியவர்: உ.வே.சாமிநாதையர், பதிப்பு: டாக்டர் உ.வே.சாமிதையர் நூல் நிலையம், பெசன்ட் நகர், சென்னை 600 090, தமிழ்நாடு, இந்தியா.
நான் திருக்குறளை அடிப்படையாகக் கொண்டே என்னுடைய எழுத்துக்களை அமைத்துக் கொள்கிறேன் என்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். மரபிலக்கியம், ராகாகி, தமிழோவியம், இ-சங்கமம் எங்கு எடுத்தாலும் என் கட்டுரைகளின் அடிநாதம் திருக்குறள்தான். ஆனால் அதில் பாரதி, கம்பன், சிலம்பு, மணிமேகலை, தொல்காப்பியம் இன்னும் பிற தமிழ்க் கருவூலங்களிலிருந்தும் எடுத்துப் பயன்படுத்துகிறேன்.
கி.மு. 300-இலிருந்து 500-க்குள் சொல்கிறார்கள் சன் சூ-வின் (Sun Tzu) காலத்தை. தன்னுடைய இளவயதிலேயே எழுதிய The Art of War என்ற இந்தப் புத்தகத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு ஹோ லூ (வூ-வின் அரசன்) தனது சேனாதிபதியாக நியமித்தானாம். அவருடைய திறமையை மன்னன் சோதித்தது பற்றிய சுவையான கதை ஒன்று உண்டு. இங்கே அதற்கு நேரம் இல்லாததால் மேலே போகலாம். இந்த நூலிலிருந்துதான் மா சே துங்-கின் சிறிய சிவப்புப் புத்தகம் (The Little Redbook) வார்த்தைக்கு வார்த்தை பல இடங்களில் கடன் வாங்கி இருக்கிறது.
சரி, அதில் என்னதான் சொல்லியிருக்கிறது? 13 அத்தியாயங்கள் (சன் சூ 13-க்குப் பயப்படவில்லை போலும்) கொண்டது இது. சீனமொழி மூலம் மிகச் சுருக்கமாக இருப்பதாகவும், மொழிபெயர்க்கையில் அது விரிக்கப்பட்டுவிட்டதாகவும் கருதப்படுகிறது. பொதுவாகவே நூல் மொழிபெயர்ப்பில் ஊதித்தான் போகும்.
அப்போது நாங்கள் டெல்லியில் இருந்தோம். அவன் ஒருமுறை பெங்களூருக்குப் போனவன் திடீரென்று அங்கிருந்து தொலைபேசினான். "எனக்குக் கல்யாணம் நிச்சயமாயிடுச்சு, இன்னும் ஒரு வாரத்தில் கல்யாணம். டெல்லிக்கு வரும்போது பெண்டாட்டியோடுதான் வருவேன்." ரொம்ப நல்லது, ரிங் மாஸ்டர் கிடைத்துவிட்டாளாக்கும் என்று நினைத்துக் கொண்டேன்.
கிருஷ்ணன் புல்லாங்குழல் ஊதுகின்ற அழகைப் பெரியாழ்வார் சொல்வது அப்படியே சர்க்கரை மலை. "கண்ணன் தனது இடது கன்னத்தைத் தோள்மேலே அழுத்திக்கொள்கிறான்; இரண்டு கைகளையும் புல்லாங்குழலில் சேர்த்து வைக்கிறான்; புருவங்கள் நெறிந்து மேலே உயர்கின்றன; காற்றை உள்ளே இழுத்து ஊதுவதனால் வயிறு குடம்போல உப்பித் தணிகிறது; உதடுகள் இடப்புறமாகக் குவிகின்றன; இப்படி புல்லாங்குழல் ஊதுகிறான்! அதைக்காண அங்கே கோபியர்கள் வந்ததைப் பார்க்க மயிலினங்களும் பெண்மான்களும் சேர்ந்து வந்தாற்போலத் தோன்றுகின்றது. காதல் மிகுதியாலே அவர்களுடைய மலர்சூடிய கூந்தல் அவிழ்ந்து தாழ்கிறது. அணிந்திருக்கும் ஆடை நெகிழ்கிறது. ஒரு கையாலே சரியும் துகிலைப் பிடித்துக்கொண்டு, ஒசிந்து நின்று தம் செவ்வரி படர்ந்த கண் கிருஷ்ணனின் மீதே பதிந்திருக்க அவர்கள் தம்மை மறந்து நிற்கிறார்கள்."
இதிலே இரண்டு துல்லியமான சித்திரங்கள். ஒன்று குழல் ஊதும்போது கண்ணனிடத்தில் ஏற்படுகிற மெய்ப்பாடுகள். அத்துடன் "சிறு விரல் தடவிப் பரிமாற, செங்கண் கோட, செய்ய வாய் கொப்பளிப்ப, குறு வெயர்ப்புருவம் கூடலிப்பக் கோவிந்தன் குழல்கொடு ஊதினபோது" என்று 282-ஆம் பாசுரத்தில் பாடுவதையும் சேர்த்துக்கொண்டால் ஒரு அசையும் சித்திரம் முழுமையாகிவிடுகிறது. அடுத்தது, அதைக் கண்டு காதல்மீதூறி நிற்கும் கோபியர்களின் மெய்ப்பாடுகள். எவ்வளவு கச்சிதமான படப்பிடிப்பு!
மாற்றம், நுவற்சி (நுவல்), செப்பு, உரை, கரை, நொடி, இசை, கூற்று, புகறல் (புகல்), மொழி, கிளவி, விளம்பு, அறை, பாட்டு, பகர்ச்சி (பகர்), இயம்பல் (இயம்பு).
சாயங்காலத்துக் கச்சேரி முடிந்தவுடன் கவுண்டரவர்கள் குதிரை வண்டியிலேறி ஊரைச் சுற்றிச் சவாரி செய்துகொண்டு வருவார். கவுண்டநகரம் சரித்திரப் பெருமையும் '§க்ஷத்திர மஹாத்மியமும்' வாய்ந்த ஊராயினும் அளவில் மிகவும் சிறியது. ஐந்து நிமிஷத்துக்குள் குதிரை வண்டி இதைச் சுற்றி வந்துவிடும். இதற்குப் பன்னிரண்டிடத்தில் 'வாங்கா' ஊதுவார்கள். இந்த வாங்கா என்பது பித்தளையில் ஒருவித ஊது வாத்தியம். பறையர் இதனை ஊதிக்கொண்டு ஜமீந்தாரவர்களின் வண்டி முன்னே குடல் தெறிக்க ஓடுவார்கள்.
இன்னும் சில சமயங்களில் ஜமீந்தார் ஏறு குதிரை சவாரி செய்வார். இவருக்கென்று தனியாக ஒரு சின்னக் குதிரை மட்டம் - ஆட்டைக் காட்டிலும் கொஞ்சம் பெரிது - தயார் செய்துகொண்டு வருவார்கள். அதன்மேல் இவர் ஏறி உட்கார்ந்தவுடன் அதற்கு முக்கால்வாசி மூச்சு நின்றுபோகும். பிரக்கினை கொஞ்சம் தான் மிச்சமிருக்கும். எனினும் இவருக்குப் பயம் தெளியாது. இவருடைய பயத்தை உத்தேசித்து முன்னும் பின்னும் பக்கங்களிலுமாக ஏழெட்டு மறவர் நின்று அதைத் தள்ளிக்கொண்டு போவார்கள். ஜமீந்தார் கடிவாளத்தை ஒருகையிலும் பிராணனை மற்றொரு கையிலும் பிடித்துக்கொண்டு பவனி வருவார்."
காரணம் உண்டு. மலை மிகச் செங்குத்தானது. கரணம் தப்பினால் மரணம் என்பது போல் 64 கொண்டை ஊசி வளைவுகளைத் தாண்டிப் போய் உச்சியை அடைந்தால், ஆஹா! என்ன சந்தோஷம். ஒரு நாளைக்கு (5 வருடங்களுக்கு முன்னால்) இரண்டு தடவை பேருந்து நாமக்கல்லிருந்து போகிறது. பயங்கரக்கூட்டம். ஜன்னல் வழியாக உங்களுக்கு முன்னால் துண்டு போட்டுவிடுவார்கள். இடித்துப் பிடித்து உள்ளே முதலில் ஏறி இடம்பிடிக்கும் திறமை இருந்தால் ஒலிம்பிக்ஸ் மெடலுக்கு முயற்சி செய்யலாம். இப்போது அதிக வசதிகள் ஏற்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
கோவிலிலிருந்து பக்கத்தில் பயணியர் விடுதி இருந்தது. 15 ரூபாய் கொடுத்தால் படுக்கை மட்டும். பை அல்லது பெட்டியை அப்படியே கட்டிலுக்குக் கீழே வைத்துக்கொண்டு தூங்கவேண்டியது. காலையில் எழுந்தால் சுற்றிலும் இருக்கும் காட்டுக்குள் போய் இறக்குமதி சமாச்சாரங்களை முடித்துக் கொள்ளவேண்டும். பல் கூடத் திறந்தவெளியில் நின்றுதான் தேய்க்கவேண்டும். அதையெல்லாம் சமாளிக்க முடியாதவர்கள் வல்வில் ஓரியில் அறைஎடுத்துக் கொள்ளவேண்டியதுதான்.
'விர்ர்ர்'ரென்று ஒரு சத்தம். மலைபோல நின்றுகொண்டிருந்த ஒரு யானை பேரொலியோடு கீழே விழுகிறது. யானையின் மேலே பாயலாமென்று தன் வாயைப் பிளந்தபடியிருந்த புலியொன்று திடீரென்று அலறிச் சுருண்டு விழுகிறது. அதன் கர்ஜனையில் காடே கிடுகிடுக்கிறது. புலியின் வாயிலிருந்து அருவிபோல இரத்தம். அதைப் பார்ப்பதற்குள் ஒரு மான் துடிதுடித்துக் கீழே விழுந்து இறந்து போகிறது. அப்பால் உரலைப்போலத் தலையை உடைய காட்டுப் பன்றி ஒன்றும் தரைமீது உருண்டு விழுந்து சாகிறது. கண்ணிமைக்கும் நேரத்துக்குள் இவ்வளவையும் செய்த அம்பு, இவற்றைத் தாண்டிப் போய் ஒரு புற்றுக்குள் பாய, அதிலிருக்கும் உடும்பு ஒன்று கடைசியாக உயிர்விடுகிறது.