November 17, 2017

சக்தியின் தாளே சரண்




சக்திக் கனல்தேக்கிச் சக்திக் கவிதூக்கி
சக்திக்கே நாமடிமை பூண்டதனால் - சக்திஓம்
சக்தியென ஆர்த்திடுவோம் சக்தியருள் பூத்திடுவாள்
சக்தியின் தாளே சரண்.

41 வருடம் பழைய வெண்பா!  1976ல் எழுதிய இந்த வெண்பாவை என் சிக்னேச்சர் கவிதையாக வைத்துக்கொண்டிருந்தேன். அப்போதெல்லாம் பங்குபெறும் கவிதையரங்கங்களில் இதை முதலில் படித்துவிட்டுத்தான் தலைப்புக்கே வருவேன். அன்னை இன்னமும் என்னை நன்கு காத்துத்தான் வருகிறாள்.

No comments: