February 02, 2005

மீண்டும் இங்கே...



தந்தனத்தோம் என்று சொல்லியே
வில்லினில் பாடி - ஆமாம்
வில்லினில் பாடி
வந்தருள்வாய் கணபதியே


என்று பாடியபடி மீண்டும் இங்கு வருகிறேன்.

இடைப்பட்ட காலத்தில் நான் விற்க அல்லது வாங்க விரும்பாத மருந்துகளை என் வலையகத்தில் கொண்டுவந்து சில மகானுபாவர்கள் கடைவிரித்திருந்தார்கள். கடை மட்டுமா, காட்சியும் விரிந்திருந்தது.

போகட்டும், மிகுந்த சிரமத்தின் பேரில் விரட்டியடித்திருக்கிறேன். இடுகைகளை அகற்றி, கடவுச் சொல்லை மாற்றி, மின்னஞ்சல் வழியே இடமுடியாமல் செய்துகொண்டு - எத்தனை வேலை செய்யவேண்டியிருக்கிறது! இதைவிடப் பேரிகை கொட்டிப் பிழைக்கலாம் போலிருக்கிறது.

பத்ரி, அனந்த், ஆர்.எஸ். மணி, மூர்த்தி ஆகிய நண்பர்கள் என் வலைப்பூவில் வந்தமர்ந்த பூவையைப் பற்றிச் சுட்டிக் காட்டினர். போதாக் குறைக்கு ஐயப்பனிடமும் 'மாற்று மருந்து' கேட்டேன். மூர்த்தி தன் தனியஞ்சலில் என்ன செய்யவேண்டும் என்பதையும் சொன்னார். என் பதிவுகள் மீதான உங்கள் அக்கறைக்கு எனது மனமார்ந்த நன்றி.

ஒரு நல்ல விஷயம், நான் வலைப்பதிவில் இடுகின்ற கட்டாயம் இல்லாத காலத்தில் சுவையான பலவற்றைப் படித்தேன். நேரம் கிடைக்கும் போது பகிர்ந்துகொள்கிறேன். ஒரு நூல் எழுதி முடித்தேன். இன்னொரு நூலை மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறேன். அவைகளைப் பற்றியும் பின்னால்.

ஆகவே, அடுத்த இன்னிங்ஸ் துவங்குகிறேன், உங்கள் அன்பு வரவேற்பை நம்பி...