சாதிகுலம் பிறப்பிறப்புப் பந்தமுத்தி அருவுருவத்
தன்மை நாமம்
ஏதுமின்றி எப்பொருட்கும் எவ்விடத்தும் பிரிவற நின்
றியக்கஞ் செய்யும்
சோதியைமாத் தூவெளியை மனதவிழ நிறைவான
துரிய வாழ்வைத்
தீதில்பர மாம்பொருளைத் திருவருளை நினைவாகச்
சிந்தை செய்வாம்.
பொருள்:
சாதி, குலம், பிறப்பு-இறப்பு, பந்தம்-முக்தி, அருவம்-உருவம், குணம்-குறி எனப்படும் எதுவுமில்லாமல், எல்லாப் பொருட்களிலும் எல்லா இடங்களிலும் உள்ளூடுருவிப் பிரிவற நின்று இயக்குகிற சோதியை, மிகப்பெரிய தூயவெளியை, மனமானது இல்லாதுபோகும் நிலையான துரியநிலையின் வாழ்வாகிறதை, தீதற்ற, யாவற்றுக்கும் உயர்ந்ததாம் பரம்பொருளை நம் சிந்தையில் எப்போதும் தியானித்திருப்போம்.
“எப்பொருட்கும் எவ்விடத்தும் பிரிவற நின்று இயக்கஞ் செய்யும்” என்பதன் பொருளை அப்படியே “ஈசாவாஸ்யம் இதம் சர்வம் யத்கிஞ்ச ஜகத்யாம் ஜகத்” என்கிற ஈசாவஸ்ய உபநிஷதத்தின் தொடக்க வரியிலேயே காணலாம்.
இந்த அருமையான பாடல் அத்வைதத்தின் மிகவுயர்ந்த நிலையான துரீயத்தை அழகாக விளக்குகிறது. ‘பிரக்ஞானம் பிரம்மா’ என்ற மஹாவாக்கியத்தின் விளக்கமாகவும் உள்ளது.
தன்மை நாமம்
ஏதுமின்றி எப்பொருட்கும் எவ்விடத்தும் பிரிவற நின்
றியக்கஞ் செய்யும்
சோதியைமாத் தூவெளியை மனதவிழ நிறைவான
துரிய வாழ்வைத்
தீதில்பர மாம்பொருளைத் திருவருளை நினைவாகச்
சிந்தை செய்வாம்.
பொருள்:
சாதி, குலம், பிறப்பு-இறப்பு, பந்தம்-முக்தி, அருவம்-உருவம், குணம்-குறி எனப்படும் எதுவுமில்லாமல், எல்லாப் பொருட்களிலும் எல்லா இடங்களிலும் உள்ளூடுருவிப் பிரிவற நின்று இயக்குகிற சோதியை, மிகப்பெரிய தூயவெளியை, மனமானது இல்லாதுபோகும் நிலையான துரியநிலையின் வாழ்வாகிறதை, தீதற்ற, யாவற்றுக்கும் உயர்ந்ததாம் பரம்பொருளை நம் சிந்தையில் எப்போதும் தியானித்திருப்போம்.
“எப்பொருட்கும் எவ்விடத்தும் பிரிவற நின்று இயக்கஞ் செய்யும்” என்பதன் பொருளை அப்படியே “ஈசாவாஸ்யம் இதம் சர்வம் யத்கிஞ்ச ஜகத்யாம் ஜகத்” என்கிற ஈசாவஸ்ய உபநிஷதத்தின் தொடக்க வரியிலேயே காணலாம்.
இந்த அருமையான பாடல் அத்வைதத்தின் மிகவுயர்ந்த நிலையான துரீயத்தை அழகாக விளக்குகிறது. ‘பிரக்ஞானம் பிரம்மா’ என்ற மஹாவாக்கியத்தின் விளக்கமாகவும் உள்ளது.
No comments:
Post a Comment